விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 100 பள்ளிகள், 50 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 50 பாலிடெக்னிக்குகள் ஆகியவற்றின் கல்வித் தரம் உயர்த்தும் தொடர் திட்டப் பணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது. இந்த ஒப்பந்தப்படி, மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி, கணினி பயிற்சி, பல்கலைக்கழகத்தில் பரிசோதனைக்கூட வசதி, ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதில் உள்ள புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் புதிய கண்டு பிடிப்புகள் குறித்த சிறப்பு பயிற்சி மற்றும் பல தேவைக்கேற்ப பயிற்சிகள் வழங்கப்படும். மேலும் பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்களுக்கு, ஏழை எளியவர்கள் உயர்கல்வி பெற்றிட கல்விக் கடன் வழங்க யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும். இதன் மூலம் இந்தியாவில் எங்கிருந்தாலும், அவர்களுக்கு அங்குள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளை மூலம் கடன் தொகை உடனே வழங்க, பல்கலைக்கழத்திலேயே விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து அனுமதி வழங்கப்படும்.